தேங்காப்பட்டணம் அருகே கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை

தேங்காப்பட்டணம் அருகே கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-11 18:43 GMT

புதுக்கடை,

தேங்காப்பட்டணம் அருகே கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை

தேங்காப்பட்டணம் அருகே உள்ள கீழ்குளம்- உசரத்துவிளையை சேர்ந்தவர் ஜான்ரோஸ் (வயது38), கொத்தனார். இவர் கடந்த பல ஆண்டுகளாக நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால், மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கடை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்