ஓடும் ரெயிலில் ஆண் பிணம்

நெல்லையில் ஓடும் ரெயிலில் ஆண் பிணமாக கிடந்தார்.

Update: 2023-03-28 18:57 GMT

மராட்டிய மாநிலம் தாதரில் இருந்து நெல்லைக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3-வது பெட்டியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அந்த ரெயில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்ததும் இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே ரெயில்வே போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்