மாரியம்மன் கோவிலில் மகர விளக்கு பூஜை

மாரியம்மன் கோவிலில் மகர விளக்கு பூஜை நடந்தது.

Update: 2023-01-03 19:49 GMT

செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே ராயம்புரம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் கடந்த 1-ந் தேதி கணபதி ஹோமத்துடன் மகர விளக்கு பூஜை திருவிழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து அய்யப்பன் கோவிலில் கன்னி பூஜை நடைபெற்றது. நேற்று மகர விளக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் 3 நாட்கள் விரதம் இருந்து, 108 பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி அய்யப்பனுக்கு மகர விளக்கு பூஜை செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யப்பனை தரிசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்