மகாசக்தி மாசாணி அம்மன் கோவில் திருவிழா

மகாசக்தி மாசாணி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.

Update: 2023-09-25 18:49 GMT

ஆலங்குடி அருகே வேங்கிடகுளம் திருப்பற்றங்கரையில் மகா சக்தி மாசாணி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து மதுஎடுப்பு விழா நடைபெற்றது. இதையடுத்து விரதம் இருந்த பக்தர்கள் வெண்ணாவல்குடி உருமநாதர் கோவிலில் இருந்து பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக மகா சக்தி மாசாணி அம்மன் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து மாசாணி அம்மன் கோவில் முன்பு அமைப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்