சாராயம் விற்றவர் கைது

சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-22 18:45 GMT

சங்கராபுரம், 

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் கள்ளிப்பட்டு பகுதியில் ரோந்துபணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் அதே கிராமத்தை சேர்ந்த முத்துசாமி (வயது 45) என்பவர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்