எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்

எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-01 17:40 GMT

குடியாத்தம் எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பு எல்.ஐ.சி. முகவர் சங்கத்தின் சார்பில் இன்சூரன்ஸ் வார விழா புறக்கணிப்பு மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு குடியாத்தம் கிளை தலைவர் எம்.சுப்பிரமணி தலைமை தாங்கினார். செயலாளர் குலசேகரன், பொருளாளர் ஆர்.சீனிவாசன், நிர்வாகிகள் விஜயகுமார், ராதாகிருஷ்ணன், வி.மாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட பொதுச் செயலாளர் ஜே.கே.என்.பழனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

எல்.ஐ.சி. ஊழியர் சங்கத்தை சேர்ந்த சரவணன், பாலாஜி சம்பத், ஈஸ்வரன் ஊழியர் நலச்சங்கத்தைச் சேர்ந்த இளங்கீரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பாலிசிக்கான போனசை உயர்த்த வேண்டும், வட்டி வகித்ததை குறைக்க வேண்டும், ஐந்து வருடங்களுக்கு மேற்பட்ட பாலிசிகளை புதுப்பிக்க வேண்டும், பாலிசி மீதான ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும், முகவர்களுக்கான பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும், மருத்துவ காப்பீடு முகவர்களுக்கு வழங்க வேண்டும், குழுக்காப்பீடு வயதுவரம்பை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்