தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னையில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

Update: 2023-11-25 01:06 GMT

சென்னை,

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 27ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் இடி,மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.

இதனிடையே, சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவாரூர் மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு வாக்காளர் பயிற்சி முகாம் நடைபெற உள்ளதால் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்