சென்னையில் இன்று பள்ளி , கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

சென்னையின் சில பகுதிகளில் இன்று லேசான மழை பெய்து வருகிறது

Update: 2024-10-18 02:29 GMT

சென்னை,

வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்றி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.இதைத் தொடர்ந்து, சென்னையின் சில பகுதிகளில் இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், மந்தைவெளி, அடையாறு, வடபழனி, ஓ.எம்.ஆர். சாலை, கிண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் , சென்னையில் இன்று பள்ளி , கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட கலெக்டர் ராஷ்மி சித்தார்த் அறிவித்துள்ளார் . செங்கல்பட்டு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்