ஆடிப்பெருக்கான இன்று கொடிவேரி தடுப்பணையில் குளிக்க தடை

ஆடிப்பெருக்கான இன்று கொடிவேரி தடுப்பணையில் குளிக்க தடை

Update: 2022-08-02 21:46 GMT

கடத்தூர்

கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலாப் பணிகள் வந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள். மேலும் தாங்கள் கொண்டுவரும் உணவு பதார்த்தங்களையும், அங்கு விற்கப்படும் மீன் வறுவல்களையும் ருசித்து உற்சாகமடைவார்கள்.

இந்த நிலையில் கொடிவேரி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்து வருவதால் கடந்த 1-ந் தேதி சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று கொடிவேரி அணையில் இருந்து வினாடிக்கு 1700 கன அடி தண்ணீர் வெளியேறியது. ேமலும் இன்று (புதன்கிழமை) ஆடிப்பெருக்கு அன்று கொடிவேரி அணையில் குளிப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் குவிவார்கள். அதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கொடிவேரி அணையில் குளிக்க பொதுப்பணித்துறை தடை விதித்துள்ளது. மேலும் நுழைவு வாயிலில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்