கருணாநிதி நினைவு தினம்: 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

ஓமந்தூரார் வளாகத்தில் பேரணி தொடங்கி கலைஞர் நினைவிடத்தில் முடிவடைகிறது.

Update: 2024-08-02 03:16 GMT

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த 2018 -ம் ஆண்டு ஆகஸ்டு 7-ம் தேதி காலமானார். கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் அவரது 6வது ஆண்டு நினைவு தினம் வருகிற 7-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 7-ம் தேதி அமைதிப் பேரணி நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. காலை 7 மணிக்கு ஓமந்தூரார் வளாகத்தில் பேரணி தொடங்கி கலைஞர் நினைவிடத்தில் முடிவடைகிறது. பேரணியில் திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேரணி நிறைவில் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்