கஞ்சா விற்ற 4 பேர் கைது

கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-03-31 18:44 GMT

மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீசார் ரோந்து சென்றபோது ஜீவாநகர் 2-வது தெருவில் கஞ்சா விற்பதாக தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு சென்று 2 மோட்டார் சைக்கிள்களில் நின்ற 4 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த கணேஷ் (வயது 20), ஜெய்ஹிந்த்புரம் அண்ணா மெயின் வீதி முகேஷ் குமார் (20), முத்து செல்வம் (21), ஜீவா நகர் 2-வது தெரு ராமர் (29) என்பதும், அவர்கள் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்