தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது

Update: 2023-05-12 18:45 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்

ராஜபாளையத்தை சேர்ந்த 41 வயது கூலி தொழிலாளி தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தையை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பூரண ஜெய ஆனந்த் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.2000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்