வாலிபருக்கு 3 ஆண்டு சிறை

வாலிபருக்கு 3 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது.

Update: 2023-04-12 18:45 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்.

வெம்பக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேல் என்ற ஆனந்த்(வயது 34). இவர் கடந்த 15.4.2022-ம் ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆனந்திற்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்