சிறுவனுக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 7 ஆண்டு ஜெயில்

சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-02-27 18:45 GMT

சிவகங்கை, 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்துள்ள இளையாத்தங்குடியைச் சேர்ந்தவர் கருப்பையா(வயது 61). இவர் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 8 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதுகுறித்து அந்தப் சிறுவனின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், கீழசெவல்பட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கருப்பையாவை கைது செய்தனர். அவர் மீது சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி சரத் ராஜ், கருப்பையாவிற்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ.5 லட்சம் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்