திருச்சியில் மது குடித்த இருவர் உயிரிழந்ததாக தகவல் - போலீஸ் விசாரணை

தச்சங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சிவகுமார், முனியாண்டி ஆகிய இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

Update: 2023-06-17 11:38 GMT

திருச்சி,

திருச்சி மாவட்டம் தச்சங்குறிச்சியைச் சேர்ந்த சிவகுமார் மற்றும் முனியாண்டி ஆகிய இருவர் நேற்று மதியம் தச்சங்குறிச்சியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீடு திரும்பிய இருவருக்கும் கடும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் தச்சங்குறிச்சி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காததால், இருவரையும் லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முனியாண்டிக்கு இரவு முழுவதும் குளுகோஸ் ஏற்றப்பட்டுள்ளது.

வீட்டிற்குச் சென்று தூங்கிய சிவகுமார் இன்று காலை உயிரிழந்ததாக தகவல் வெளியானது. மறுபுறம் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முனியாண்டியும் உயிரிழந்தார். இது குறித்து முனியாண்டியின் மகன் மணிராஜ் என்பவர் போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்ட எஸ்.பி., லால்குடி டி.எஸ்.பி. உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்