கூடலூரில் ராஜா கிணறு அருகே இறந்து கிடந்த விவசாயி

கூடலூரில் ராஜாகிணறு அருகே விவசாயி இறந்து கிடந்தார்.

Update: 2022-11-25 18:45 GMT

கூடலூர் 8-வது வார்டு சிக்கன கவுடர் தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 48). விவசாயி. இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரியில் ஸ்கேன் செய்து பாா்த்தபோது நுரையீரல் பாதித்தது தெரிந்தது. இதனால் மன வருத்தத்தில் இருந்த அவர் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி வெண்ணிலா பல்வேறு இடங்களில் தேடி அலைந்தார்.

இதற்கிடையே நேற்று காலை கூடலூர் காந்திகிராமத்தை அடுத்த ராஜா கிணறு அருகே செந்தில்குமார் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் வெண்ணிலாவிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் அங்கு சென்று பாா்த்தார். தகவல் அறிந்த கூடலூர் தெற்கு போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வெண்ணிலா கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முகுந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்