முதியவருக்கு சாகும் வரை சிறை

சிறுமிக்கு பாலியல் ெதால்லை அளித்த வழக்கில் முதியவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-05-17 19:04 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ராஜபாளையத்தை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர் கடந்த 2.7.2022 அன்று 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து 75 வயது முதியவருக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க பரிந்துரை செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்