ஜெயங்கொண்டம் மக்கள் நீதிமன்றத்தில் 186 நில ஆர்ஜித வழக்குகளுக்கு உடனடி தீர்வு

ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 186 நில ஆர்ஜித வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

Update: 2023-08-17 18:52 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் திட்டத்திற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் கையகப்படுத்திய நிலங்களை அந்தந்த நில உரிமையாளரிடம் ஒப்படைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருந்தது. இதையடுத்து, உரிமையாளர்களிடம் நிலப்பட்டா வழங்க ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் மூலம் மக்கள் நீதிமன்றம் நேற்று நடத்தப்பட்டது. அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான கிறிஸ்டோபர் உத்தரவின் பேரில், அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் அழகேசன் மக்கள் நீதிமன்றத்தை தலைமை தாங்கி நடத்தினார். இதில் 186 நில ஆர்ஜித வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு உரிய நில உரிமையாளர்களுக்கு நிலப்பட்டாவை மாற்றிக் கொடுக்க மக்கள் நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. மக்கள் நீதிமன்றத்தில் ஜெயங்கொண்டம் தனி தாசில்தார் (அனல் மின் திட்ட நிலம் எடுப்பு) வேலுமணி, தேவகி, அரசு வக்கீல்கள் மோகன் ராஜ், செந்தில்குமார், நீதிமன்ற பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்