கணவன்-மனைவி கைது

மகன் காதலித்த பெண்ணை மிரட்டிய கணவன்=மனைவியை போலீசாா் கைது செய்தனர்.

Update: 2022-08-12 19:25 GMT

நன்னிலம்:

நன்னிலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:- நன்னிலம் அருகே உள்ள மகிழஞ்சேரி கீழத்தெருவை சேர்ந்த குமார் மகன் சூர்யாவும், நானும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். சூர்யா வெளிநாட்டிற்கு சென்று விட்டார். அதன்பிறகும் நாங்கள் செல்போன் மூலம் காதலை வளர்த்து வந்தோம். அப்போது வெளிநாட்டில் இருந்து வந்ததும் என்னை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சூர்யா வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து வந்த பிறகும் என்னுடன் பழகி வந்தார். இதை தொடர்ந்து நான் சூர்யா வீட்டிற்கு சென்று என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டேன். அதற்கு சூர்யாவும், அவரது தந்தை குமார், தாய் கீர்த்திகா ஆகியோர் என்னை மிரட்டி திட்டி திருமணம் செய்ய மறுத்தனர் என அவர் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் நன்னிலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார், கீர்த்திகா ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சூர்யாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்