கனமழை: நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்

Update: 2024-07-16 01:37 GMT

நீலகிரி,

தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் சில பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இந்த நிலையில், கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்