கடும் பனிமூட்டம்... முன்னால் சென்ற லாரி மீது பஸ் மோதல் - 10 பேர் காயம்

மதுராந்தகம் அருகே லாரி மீது பஸ் மோதிய விபத்தில் 10 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2022-12-31 04:25 GMT

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று திரும்பிய பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் சேலத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இருந்தனர். இந்த நிலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக முன்னால் சென்ற லாரியின் மீது பஸ் மோதியது.

இந்த விபத்தில் பஸ்சில் இருந்து 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்