தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

Update: 2022-07-15 16:16 GMT

தக்கலை:

தக்கலை அருகே உள்ள சாரோடு பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (வயது54), தொழிலாளி. இவருக்கு பிரேமா புனிதா (49) என்ற மனைவி உள்ளார். கடந்த சில மாதங்களாக குமாரசாமி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால், மனமுடைந்த அவருக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து குமாரசாமி தினமும் மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது குமாரசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குமாரசாமியின் மனைவி பிரேமா புனிதா தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ேமலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்