மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியானார்.

Update: 2022-05-25 19:15 GMT

வடகாடு:

வடகாடு அருகே சூரன்விடுதி, சிக்கப்பட்டி பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி மனைவி தனபாக்கியம் (வயது 60). இவர், சைக்கிளில் தண்ணீர் எடுத்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நெடுவாசல் கீழ்பாதி பகுதியை சேர்ந்த செந்தில் (45) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக தனபாக்கியம் ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தனபாக்கியம் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து வடகாடு போலீசார் மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிந்து, செந்திலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்