பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை: உறவினர்கள் மறியல்

கரூர் அருகே பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டித்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-03 18:44 GMT

இளம்பெண்

நாமக்கல் மாவட்டம், குமரமங்கலம் பகுதியை ேசர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி லலிதா. இந்த தம்பதிக்கு கீதா (26), சந்தியா (24) என்ற மகள்கள் உள்ளனர். இதில், கீதா பி.இ. பட்டதாரி ஆவார். சந்தியா பேஷன் டெக்னாலஜி டிசைனராக உள்ளார்.

கரூர் மாவட்டம் தும்பிவாடியை சேர்ந்த வேலவன் (30) என்பவருக்கும், கீதாவிற்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளார். இந்த தம்பதிக்கு சிவதர்ஷிபா என்ற 11 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

தற்கொலை

இந்நிலையில் கீதா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் புன்னம் சத்திரம் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கீதா தூக்குப்போட்டு கொண்டார்.இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் கீதாவை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு கீதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

உறவினர்கள் மறியல்

இதுகுறித்து நாகராஜன் கொடுத்த புகாாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிந்து, தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் கீதாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் கரூர்-திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் துணை போலீஸ் சூப்பரண்டு சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கரூர்-திருச்சி சாலை சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்