கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் துரைமுருகன்

ஆந்திரா அரசு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-05 10:24 GMT

சென்னை,

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில், மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று 10 பள்ளிகளை சேர்ந்த 1,968 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

வேளாண்மை செழிக்கும் வகையிலும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அடுத்த ஆண்டு அணைக்கட்டு பகுதியில் அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அணைக்கட்டு பகுதியில் புதிய தொழில் பேட்டை ஒன்றும், அரசு கல்லூரியும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆந்திரா அரசு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுக்க தமிழ்நாடு அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும். மேட்டூர் உபரி நீ திட்டம், தர்மபுரி மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. வாய்ப்பு இருந்தால் பிற மாவட்டங்களுக்கு விரிவு படுத்தப்படும் என்றார். தமிழ்நாட்டில் புதிய அணைகள் கட்ட வாய்ப்பு இல்லை. அதற்கான இட வசதியோ? நீர்வரத்தோ? இல்லை.

இவ்வாறும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்