ராமநாதபுரம் பரமகுடி அருகே கார் மீது அரசுப்பேருந்து மோதி விபத்து - 3 பேர் பலி

ராமநாதபுரம் பரமகுடி அருகே கார் மீது அரசுப்பேருந்து மோதி விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2022-11-20 18:55 GMT

பரமகுடி,

ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடி அருகே கார் மீது அரசுப்பேருந்து மோதி விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரசுப் பேருந்து மோதிய விபத்தில் , காரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர்.

கிருஷ்ணகிரியை சேர்ந்த மணிமேகலை, ரஞ்சனி மற்றும் ஓட்டுநர் செல்வகுமார் ஆகியோர் ராமேஸ்வரத்திற்கு சென்ற போது விபத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்