எறிபந்து போட்டியில் மாணவிகள் சாதனை

எறிபந்து போட்டியில் குட்ஷெப்பேடு பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்.

Update: 2023-09-10 18:45 GMT

கடையம்:

தேசிய விளையாட்டு தினம், தயான்ந்த் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நெல்லை தாமிரபரணி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. அதில் குட்ஷெப்பர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் எறிபந்து போட்டியில் முதலிடம் பிடித்தனர். மாணவர்கள் கையுந்து போட்டியில் 2-ம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் ஆண்டனி பாபு, முதல்வர் ஜோஸ்பின் விமலா, தலைமை ஆசிரியை மீராள், உடற்கல்வி ஆசிரியர்கள் விஷ்ணு பிரியா, பேச்சிமுத்து, நவீன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்