உடன்குடி:
மெஞ்ஞானரபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் உடன்குடி மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை ஆகியவை சார்பில் இலவச மருத்துவ முகாம் உடன்குடி தேரியூர் பெருமாள் சுவாமி கோவில் வளாகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் ஆனிபிரிமின் தலைமை தாங்கி சுகாதாரமாக வாழ்தல், சுற்றுப்புறங்கள், வீடுகளை தூய்மையாக வைத்தல் குறித்து பேசினார். மன்ற நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், கோதண்டராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அனைத்து வகையான நோய்களுக்கும் பரிசோதிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேதுகுற்றாலம், சுகாதார ஆய்வாளர் சேதுபதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.