சிறு தொகையை முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் எனக்கூறி ஓட்டல் மேலாளரிடம் பணம் மோசடி

சிறு தொகையை முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் எனக்கூறி ஓட்டல் மேலாளரிடம் பணம் மோசடி நடந்துள்ளது.

Update: 2023-02-20 18:45 GMT

விழுப்புரம் அருகே உள்ள பனையபுரத்தை சேர்ந்தவர் சிவசக்தி (வயது 28). இவர் பனையபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் தனது முகநூலை பயன்படுத்திக் கொண்டிருந்தபோது பகுதிநேர வேலை என்ற விளம்பரத்தில் இருந்த சைன்அப்பை தொட்டுள்ளார். உடனே ஒரு வாட்ஸ்-அப் எண்ணுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு அதிலிருந்து தொடர்புகொண்டு பேசிய நபர், சிவசக்திக்கு ஒரு லிங்கை அனுப்பினார். உடனே சிவசக்தி, அந்த லிங்கிற்குள் சென்று தனக்குரிய பாஸ்வேர்டை பதிவு செய்து வாட்ஸ்-அப் மூலம் அனுப்பிய மற்றொரு லிங்கிற்குள் சென்றார். அப்போது டெலிகிராம் மூலம் சிவசக்தியை தொடர்புகொண்ட நபர் ஒருவர், சிறிய தொகையை ரீசார்ஜ் செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறினார். இதை நம்பிய சிவசக்தி, ரூ.200-ஐ செலுத்தி ரூ.195-யும், பின்னர் ரூ.500-ஐ செலுத்தி ரூ.995-யும் பெற்றுள்ளார். அதன் பிறகு அவர் ரூ.87,500-ஐ 10 தவணைகளாக தான் கணக்கு வைத்திருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட கூகுள்பே மூலம் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் சிவசக்திக்கு கொடுக்க வேண்டிய பணத்தை தராமல் அந்த நபர்கள் ஏமாற்றி மோசடி செய்துவிட்டனர். இதுகுறித்து அவர், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்