குலசேகரம் அருகே மின்சாரம் தாக்கி உணவு நிறுவன ஊழியர் பலி

குலசேகரம் அருகே வீட்டில் மின்சாரம் தாக்கியதில் உணவு நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-10-13 18:45 GMT

குலசேகரம் அருகே உள்ள பிணந்தோடு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது43). இவருக்கு தீப்தி என்ற மனைவியும் தீரஜ் (13), தனுஜ் (10) என்ற 2 மகன்களும் உள்ளனர். தினேஷ் துபாயில் ஒரு உணவு நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 5 தினங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.

இந்தநிலையில் நேற்று மாலையில் இந்த பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது தினேஷ் வீட்டில் உள்ள இன்வெர்டர் இணைப்பை துண்டிக்க முயன்றார்.

மின்சாரம் தாக்கியது

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் மின்சாரம் தாக்கி உணவு நிறுவன ஊழியர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்