பிணமாக கிடந்த திருச்சி தீயணைப்பு நிலைய ஊழியர்

திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சி தீயணைப்பு நிலைய ஊழியர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

Update: 2023-06-29 19:27 GMT

திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சி தீயணைப்பு நிலைய ஊழியர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தீயணைப்பு நிலைய ஊழியர்

பெரம்பலூர் கல்யாணம் நகரை சேர்ந்தவர் இருதயராஜ் (வயது59). திருச்சி தீயணைப்பு நிலைய அலுவலக ஊழியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி மகேஸ்வரி (52), திருச்சியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 28-ந் தேதி மகேஸ்வரி, இருதயராஜை செல்போனில் தொடர்பு கொண்ட போது அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை.

இதையடுத்து மகேஸ்வரி பெரம்பலூரில் உள்ள வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவர் அங்கு இல்லை. இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கோவிலடி பகுதியில் உள்ள சுடுகாடு அருகில் ஒருவர் பிணமாக கிடப்பதாக தோகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் விசாரணை

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக கிடந்தவர் மாயமான இருதயராஜ் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து மகேஸ்வரி அளித்த புகாரின்பேரில் தோகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருதயராஜ் எப்படி இறந்தார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்