வைக்கோல் படப்பில் திடீர் தீ

வைக்கோல் படப்பில் திடீர் தீப்பிடித்தது.

Update: 2023-06-11 18:45 GMT

தொண்டி, 

திருவாடானை தாலுகா பாண்டுகுடி கிராமத்தை சேர்ந்த பாண்டி என்பவருக்கு சொந்தமான வைக்கோல் படப்பில் திடீரென தீ பற்றியது. இதையடுத்து கிராம மக்கள் அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. அதனை தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அனைத்தனர். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்