மத்திய அரசின் சேமிப்பு கிட்டங்கியில் திடீர் தீ

மத்திய அரசின் சேமிப்பு கிட்டங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2022-07-21 18:00 GMT

விருதுநகரில் உள்ள மத்திய சேமிப்பு கிட்டங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அரிசி மூடைகளை மூடி வைத்திருந்த தார்ப்பாயில் ஏற்பட்ட தீ விபத்தால் ஒரு சில அரிசி மூடைகள் மட்டும் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்