திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் திடீர் தீ

திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் திடீர் தீ ஏற்பட்டது.

Update: 2022-07-13 19:17 GMT

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றத்தில் உள்ள தென்கால் கண்மாய்க்குள் சிலர் புல் பண்ணை வளர்த்து ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. அதை அகற்ற வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் திடீரென்று கண்மாயில் உள்ள காய்ந்த புல்லில் தீப்பிடித்தது. தீ மளமளவென எரிந்து புகை மண்டலமாக மாறியது. இதுகறித்து தகவல் அறிந்த மதுரை தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இது குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்



Tags:    

மேலும் செய்திகள்