மாரியம்மன் கோவில் திருவிழா

காவேரிப்பட்டணத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

Update: 2022-07-13 16:30 GMT

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணத்தில் மகாமாரியம்மன், சாமுண்டியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர். விழாவையொட்டி பக்தர்கள் அம்மன் வேடம் அணிந்து ஆட்டம் ஆடி ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்