மயிலம் அருகே சவுக்கு தோப்பில் பெண் பிணம்

மயிலம் அருகே சவுக்கு தோப்பில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-09-08 18:45 GMT

மயிலம், 

பெண் பிணம்

மயிலம் அருகே சிங்கனூர் ஏரிக்கரை அருகே சவுக்கு தோப்பில் அழகிய நிலையில் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதுகுறித்து மயிலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலம் போலீசார் இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

கொலையா?

பின்னர், அவரது உடலை மீட்டு, பிரேத பாிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்த இதுகுறித்து சிங்கனூர் கிராம நிர்வாக அலுவலர் லட்சுமி கொடுத்த புகார் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்து கிடந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்