முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து 4-வது நாளாக விவசாயிகள் போராட்டம்

முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து 4-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-31 19:35 GMT

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்காமல் விவசாயிகள் மற்றும் விவசாயத்தை நசுக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்தும், காவிரியில், தமிழகத்திற்கான தண்ணீர் பெற்றுத்தர முனைப்பு காட்டாத தமிழக அரசை கண்டித்தும், தமிழகத்திற்கான தண்ணீரை திறந்து விட கர்நாடக மாநிலத்திற்கு அழுத்தம் தராத மத்திய அரசை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று 4-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக கூறி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்