ரூ.25 லட்சம் இழப்பீடு கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையம் முன்பு தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-03-21 19:00 GMT

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அகில இந்திய துணை தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். இதில் மாநில பொருளாளர் பெருமாள், மாவட்ட தலைவர் என்.பெருமாள், செயலாளர் ராமசாமி, பொருளாளர் தயாளன் மற்றும் நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் விவசாயி பாண்டி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள், போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயி பாண்டியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பாண்டியின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்