மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

கிணத்துக்கடவு அருகேமோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியானார்.

Update: 2022-08-30 16:31 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள கல்லாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 62), விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது மகனை ஏலூர் பிரிவில் இருந்து மொபட்டில் வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். கிணத்துக்கடவு-கல்லாபுரம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடிரென மொபட் பழுதானது.

இதனால் செல்வராஜ் மொபட்டை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு பழுது பார்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் செல்வராஜ் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக விபத்தை ஏற்படுத்திய கல்லாபுரத்தை சேர்ந்த கிருஷ்ணராஜ் (21) என்பவர் மீது கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்