மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி சாவு

மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-01-19 19:17 GMT

. உளுந்தூர்பேட்டை.

. உளுந்தூர்பேட்டை அடுத்த திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் வெங்கடேசன் (வயது 46). விவசாயி. இவர் தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக பையூர் பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி சரண்யா கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

மேலும் செய்திகள்