போலி டாக்டர் கைது

போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-10 19:40 GMT

பொன்னமராவதி:

பொன்னமராவதி அருகே நகரப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன்(வயது 58). இவர் அப்பகுதியில் கிளினிக் வைத்துள்ளார். இந்நிலையில் இவர் குறித்து பொன்னமராவதி போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், பத்தாம் வகுப்பு படித்துள்ள அவர், மருத்துவம் படித்துள்ளதாக பொதுமக்களிடம் கூறி, கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு ஊசி போட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கி சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாகராஜனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்