ஆட்டோ டிரைவரை வழிமறித்து நகை, பணம் பறிப்பு

ஆட்டோ டிரைவரை வழிமறித்து நகை, பணம் பறிக்கப்பட்டது.

Update: 2022-07-16 17:36 GMT

இளையான்குடி, 

இளையான்குடி அருகே உள்ள பிராந்தமங்கலத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 35). ஆட்டோ டிரைவர். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சீராத்தங்குடி பெட்ரோல் பங்க் செல்லும் வழியில் மர்ம நபர்கள் வழிமறித்து அவரிடம் இருந்து 2 பவுன் செயின் மற்றும் சட்டை பையில் வைத்திருந்த ரூ. 6,500 ஆகியவற்றை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து அவர் இளையான்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்