காரைக்குடியில் வேலைவாய்ப்பு முகாம்

காரைக்குடியில் வேலைவாய்ப்பு முகாம் 25-ந் தேதி நடக்கிறது

Update: 2023-03-21 18:45 GMT

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது.:-

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 25-ம் தேதி (சனிக்கிழமை) காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் ஐ.டி.ஐ., டிப்ளமோ, டெய்லரிங் மற்றும் நர்சிங் முடித்த 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொள்ளலாம். தங்களது பயோ டேட்டா (சுயவிவரப் படிவம்), ஆதார் அட்டை நகல் மற்றும் அனைத்து கல்விச்சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் வேலைவாய்ப்பு இணையதளமான www.tnprivatejobs.tn.gov.in-ல் தங்களது சுய விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இம்முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறும் விண்ணப்பங்களும் வழங்கப்படும். இம்முகாமில் கலந்து கொண்டு பணிவாய்ப்பு பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்