கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல்

கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல்

Update: 2022-12-29 18:53 GMT

தேவகோட்டை

தமிழ்நாடு பாசனதாரர்கள் நீர் பாசன அமைப்பு சார்பில் மணிமுத்தாறு உப வடிநில அஞ்சுகோட்டை கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. தேர்தலை உதவி கலெக்டர் மங்களநாதன் தேர்தல் அதிகாரியாக இருந்து நடத்தினார். உதவி அதிகாரியாக விக்னேஸ்வரன் இருந்தார். நேற்று காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மதியம் 2 மணிக்கு முடிவடைந்தது. இதற்காக தேவகோட்டை மற்றும் திருவாடானை தாலுகாக்களில் 21 பூத் அமைக்கப்பட்டிருந்தன. 34 கண்மாய் நீரினை பயன்படுத்தும் 4 ஆயிரத்து 500 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. தலைவர் பதவிக்கு கோட்ட வயல் ரவி, முப்பையூர் வேலு என 2 பேர் போட்டியிட்டனர். மொத்த வாக்குகளில் 671 பதிவானது. இதில் கோட்டவயல் ரவி 376, முப்பையூர் வேலு 289 பெற்றனர். செல்லாதவை 6. இதனால் கோட்டவயல் ரவி வெற்றி பெற்றார். இவர் தேவகோட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாக இருந்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்