போதை பொருள் விழிப்புணர்வு ஊர்வலம்

கீழ்வெங்கடாபுரம் ஊராட்சியில் போதை பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2023-06-30 18:20 GMT

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த கீழ்வெங்கடாபுரம் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி அறிவுறுத்தலின் பேரில் நெமிலி போலீசார் சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

இதில் நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு, ஊராட்சி மன்ற தலைவர் அம்மு தட்சிணாமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் விநாயகம், பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்