"அரசின் தவறுகளை கண்டுபிடித்து விடுவதால் கவர்னரை நீக்க வேண்டும் என தி.மு.க. வலியுறுத்துகிறது" - வானதி சீனிவாசன்

அரசின் தவறுகளை கண்டுபிடித்து விடுவதால் கவர்னரை நீக்க வேண்டும் என தி.மு.க. வலியுறுத்துவதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-10 17:54 GMT

சென்னை,

பா.ஜ.க. மகளிர் அணியின் தேசிய தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறும் கருத்துக்களில் தி.மு.க.விற்கு உடன்பாடு இல்லையெனில், ஜனநாயக ரீதியாக கருத்துக்கு கருத்து என்ற வகையில் பதில் அளிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் மாறாக கவர்னரை பதவியில் இருந்து நீக்குமாறு கோருவது, தி.மு.க.விற்கு ஜனநாயக வழியில் கருத்து பறிமாறுவதில் நம்பிக்கை என்பதையே காட்டுகிறது என அவர் விமர்சித்துள்ளார். மேலும் அரசின் தவறுகளை கவர்னர் கண்டுபிடித்து விடுவதால், அவரை நீக்க வேண்டும் என தி.மு.க. வலியுறுத்துவதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்