மாவட்ட அளவிலான யோகாசன போட்டி

திண்டிவனம் ஜெயின் பள்ளியில் மாவட்ட அளவிலான யோகாசன போட்டி

Update: 2022-07-19 16:18 GMT

திண்டிவனம்

திண்டிவனம் ஜெயின் பள்ளி, தமிழ்நாடு யோகாசன சங்கம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான யோகாசன போட்டி திண்டிவனம் ஸ்ரீ தரம்சந்த் ஜெயின் பள்ளியில் நடைபெற்றது. போட்டியை பள்ளியின் பொருளாளர் நவீன்குமார் தொடங்கி வைத்து வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

இதில் யோகாசன சங்க நிர்வாகிகள் ராஜகோபாலன், சுரேஷ், ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களின் திறமைகள் மதிப்பிடப்பட்டன. வயதை அடிப்படையாக கொண்டு 3 பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் மாவட்டம் முழுவதிலும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்