மாவட்ட அளவிலான சதுரங்கப்போட்டி

ராஜபாளையத்தில் மாவட்ட அளவிலான சதுரங்கப்போட்டி நடைபெற்றது.

Update: 2022-08-07 18:57 GMT

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்ட செஸ் அசோசியேசன் சார்பில் மாவட்டத்தலைவர் பாஸ்கர் தலைமையில் ராஜபாளையம் கேசா டீமீர் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்கப்போட்டி மற்றும் மாநில தகுதி போட்டி நடைபெற்றது. இதில் 230 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த போட்டிகள் 8 வயது, 10 வயது, 13 வயது, 19 வயதுக்குட்பட்டவர்கள் என நான்கு பிரிவுகளாக நடைபெற்றன. இதில் 13 வயதுக்குட்பட்டோருக்கான போட்டி நடத்தப்பட்டது. மற்றும் மாநில செஸ் போட்டிக்காக நடந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் என 4 பேர் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். மற்ற பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்