வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: கலெக்டர் உத்தரவு

வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Update: 2023-06-01 18:03 GMT

வளர்ச்சி திட்ட பணிகள்

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், பவித்ரம், சூடாமணி, சின்னதாராபுரம், மொஞ்சனூர், தென்னிலை மேற்கு மற்றும் கூடலூர் ஆகிய ஊராட்சிப் பகுதியில் நேற்று ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டார்.

தொடக்கப்பள்ளி

முதலில் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் பவித்ரம் ஊராட்சி, பெரிய தாதம்பாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றியம் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் சமையல் கூடத்தினை புனரமைக்கும் பணியினையும், தும்பிவாடி பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதி திட்டத்தின் ரூ.59 ஆயிரம் மதிப்பில் சமையல் கூடம் புனரமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.

சூடாமணி ஊராட்சி பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் நூலக கட்டிடம் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் நூலகத்தில் சிறிய சமூக சமுதாய சுகாதார வளாகம் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் பார்வையிட்டார்.

புனரமைக்கும் பணி

சின்னதாராபுரம் ஊராட்சி, மல்லநத்தம் பகுதியில் பாரத பிரதமர் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் தனி நபர் வீடு கட்டிவரும் பணிகளயும், கூடலூர் கிழக்கு ஊராட்சி, பனையம்பாளையம் சமத்துவபுரம் வீடுகள் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் பெரியார் சமத்துவபுரத்தில் உள்ள 78 வீடுகளை தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் வீடுகளை புனரமைக்கும் பணிகளையும் பாா்வையிட்டனர்.

தென்னிலை மேற்கு பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சத்து 99 ஆயிரம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் பணிகள் நடைபெற்று வருவதையும்,

மொஞ்சனூர் ஊராட்சி, தொட்டம்பட்டி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும் மற்றும் அரசு நடுநிலைப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.58 ஆயிரம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு, இந்த பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்க கலெக்டர் அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்