திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-09 18:37 GMT

கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார். இதில் காப்பாளர் ராஜூ, மாவட்ட செயலாளர் காளிமுத்து, மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் ராஜசேகரன், மாவட்ட இளைஞரணி தலைவர் அலெக்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டு, 10 லட்சம் மக்களுக்கு 100 பேர்தான் மருத்துவக்கல்லூரியில் சேர்க்க வேண்டுமா, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரி கட்ட கூடாதா, மாநில அரசுக்கு தடை போட மத்திய அரசுக்கு உரிமை உண்டா என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்